நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நாளைய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணியில் மறைந்த கியூப நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக வீர வணக்கப் பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), த.ம.பு.க., தி.க., தி.வி.க., போன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் சோசலிச சிந்தனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். நன்றி : மெய்ச்சுடர்