பேராவூரணி அட்லாண்டிக் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்..

No comments

Peravurani Town :




டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அட்லாண்டிக் பள்ளி மாணவர்கள் பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் தொடங்கி பேராவூரணி கடைவீதியில் ஊர்வலம் நடந்தது சென்றனர்

பேராவூரணி COOL GUYS...

No comments













பேராவூரணி COOL GUYS இளைஞர் மன்றத்தின் சார்பாக மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

பேராவூரணி எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் நடத்தும் கட்டுரை போட்டி

No comments

பேராவூரணி எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் நடத்தும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரை போட்டி:

தலைப்பு :
• குடியரசு தலைவரக ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய தொண்டு.
• ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் கடந்து வந்த பள்ளி மற்றும் கல்லூரிப்பருவாம்.
• விஞ்ஞானி ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் நாட்டிற்கான பங்களிப்பு.
• ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுக்காக ஆற்றிய பங்கு.
• ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் கண்ட கனவு “இந்தியா 2020”.
 

தேதி: 31-07-2016
 

நேரம்: காலை 10:00 மணிக்கு
 

இடம்: எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட், 3-1 நீலகண்டன் 2-தெரு,
தேரடித் தெரு, பேராவூரணி.
எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் தலைவர் திரு.சின்னத்தம்பி,செயலாளர் திரு.கலையரசன் இவர்களின் தலைமையில் நடைபெறும்.

அனைத்து மாணவர்களுக்கும் கலந்து கொள்ளுங்கள்

பேராவூரணி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள்

No comments

பேராவூரணி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 
1. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
2. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி
3. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
4. ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி
5. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
6 .டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
7. மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
8. வீ.ஆர்.வீரப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி.
9. அகஸ்ட் சியோன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
10. ராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
11. லியோஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
12. ஸ்ரீ வெங்கடேஷ்வரா CBSE பள்ளி
13. அரசினர் மேல்நிலைப்பள்ளி
14 .அட்லாண்டிக் இண்டர்நேஷனல் ரெசிடெண்சி பள்ளி.
15. அண்ணா பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை
16. SMR கிழக்குக்கடற்கரை சாலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி
17. ஸ்ரீ வெங்கடேஷ்வரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
18. டாக்டர்.கலாம் பாலிடெக்னிக் கல்லூரி
19. மனோரா பாலிடெக்னிக் கல்லூரி.
20. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இவை அனைத்தும் பேராவூரணி பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள்…

நீலகண்ட விநாயகர் வரலாறு சிறப்பு ...

No comments

காயாத ஊருணிகள் நிறைந்து வளம் பொங்கும் ஊரென (பெயரா ஊருணி) பொருள்படும் பேராவூரணியில் பிரமாண்டமாக விரிந்து கிடக்கும் ஊருணிக் கரையொன்றில் இருக்கிறது இப்பழமையான கோயில். முடப்புளிக்காடு கிராமத்தில் வசிக்கும் சங்கரர் வகையறாக்களைச் சேர்ந்த மக்கள் சிறிய அளவில் வைத்து வணங்கிய இக்கோயில், திருநீலகண்டனின் மகிமையால் இன்று பிரமாண்டமாக பெயர் பரவி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் துளசி மகாராஜா, தீவிர தெய்வ பக்தி கொண்டவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களை புனரமைத்தவர்.
அவரின் அன்புக்குப் பாத்திரமான தலைமை மந்திரிக்கு தீராத நீரிழிவு நோய் இருந்தது. நாட்டின் பல வைத்தியர்களிடம் சிகிச்சைப் பெற்று பார்த்தார்; நோயின் கடுமை குறையவில்லை. தம் அமைச்சரின் துன்பத்தைக் கண்டு வருந்திய துளசி மகாராஜா, நாடெங்கும் இருக்கும் திறன் வாய்ந்த வைத்தியர்கள் பற்றி விசாரிக்க தம் பரிவாரத்துக்கு உத்தரவிட்டார். ஆவுடையார்கோயிலில் வைத்தியர் ஒருவர் இருப்பதாகவும் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் செய்வதில் வல்லவர் என்றும் செய்தி கிடைத்தது. இதையடுத்து, அமைச்சரை அழைத்துக் கொண்டு ஆவுடையார்கோயில் நோக்கி பயணித்தார் மன்னர். வழியில் பேராவூரணியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், வயற்பரப்பில், சிறுகுடில் ஒன்றில் குடியிருந்த நீலகண்ட பிள்ளையாருக்கு, சிவனடியார்கள் (சங்கரர்கள்) இருவர் பூஜைசெய்து கொண்டிருப்பதைக் கண்டார் மன்னர்.
உடனடியாக தம் பல்லக்கை நிறுத்தி, அமைச்சரை அழைத்துக் கொண்டு அந்த கோயிலுக்குச் சென்றார். பிள்ளையாரை மனமுருக வணங்கி, அங்கிருந்த சங்கரர்களிடம், தம் அமைச்சரின் நிலையைக் கூறி அர்ச்சனை செய்யும்படி கோரினார். சங்கரர்களும் பிள்ளையாரைப் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்து திரு நீறும், அறுகம்புல் பிரசாதமும் தந்தார்கள். திருநீறை அணிந்து, அறுகம்புல்லை சாப்பிட்ட சில நாட்களிலேயே, அமைச்சரின் நீரிழிவு நோய் முற்றிலுமாகக் குணமடைந்தது. தம் அமைச்சரின் நோயை நீக்கிய பிள்ளையாரின் மகிமையைக் கண்டு பரவசமடைந்த துளசி மகாராஜா , நீலகண்டரின் பெயரில் பல வேலி நிலங்களை எழுதிவைத்து, கோயிலையும் விரிவுபடுத்திக் கட்டினார்.
அன்று முதல் இன்றுவரை நீலகண்டரின் திருநீறையும் அறுகையும் அருமருந்தாக கருதுகிறார்கள் பக்தர்கள். தம் கருணையால் பக்தர்களின் நோய்களகற்றி, கேட்ட வரங்களை வாரி வழங்குகிறார் நீலகண்டர். இவரைத் தரிசிக்க மாநிலங்கள் கடந்தும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். பிள்ளையார்பட்டியை அடுத்து, பிள்ளையாருக்கென்று பிரத்யேகமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஈசனின் குடும்பமே குடியிருப்பதாக ஐதீகம்.
தீராத வினைதீர்க்கும் திரு நீலகண்ட பிள்ளையார் நம்ப ஊர் குலதெய்வமாக விளங்குகிறது.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar