Latest

latest

ஆடி அமாவாசை , ஆடி பெருக்கு , குரு பெயர்ச்சி விழா ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் அலையத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது...

Peravurani Town :

/ by IT TEAM


ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் ஏராளமான பக்தர்கள் வழி பட்டனர்.

பேராவூரணி பகுதியில் உள்ள கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, ஏராளமான சுமங்கலி பெண்கள், கன்னிப்பெண்கள், குழந்தைகள் வழிபட்டு, காப்பரிசி, இனிப்புகள், பழங்கள் வைத்து படைத்து, மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டனர்.

புதுமணத் தம்பதிகள் தங்களது திருமணத்தின்போது அணிந்து கொண்ட மாலைகளை வீட்டில் பத்திரப்படுத்தி, அதை ஆடிப்பெருக்கு விழாவின்போது கொண்டு வந்து ஆற்றில், குளத்தில் விடுவது வழக்கம்.

ஆடி 18-ஐ முன்னிட்டு புதுமணத் தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டு தாலிகயிற்றை பிரித்து புதிதாக அணிந்துகொண்டனர். நீலகண்டப்பிள்ளையார் வழி பட்டனர்.

அப்பகுதி முழுவதும் திருவிழாபோல காட்சியளித்தது

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar