Latest

latest

பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் தெருமுனை பிரசாரம்

Peravurani Town :

/ by IT TEAM



பேராவூரணி மற்றும் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டக்குழு சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாலசுந்தரம், தென்னை விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உரித்த தேங்காய் கிலோ ரூ.40 நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை கிலோவுக்கு ரூ.120 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். கொப்பரைகளை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ம் தேதி அனைத்து தென்னை விவசாயிகள் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்னை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காசிநாதன், ரவி, ராஜமாணிக்கம், நாதன், ஆரோக்கியசாமி, பன்னீர்செல்வம், தேசக்காவலன் கலந்து கொண்டனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar