Latest

latest

பேராவூரணி பேரூராட்சியில் தீவிர காய்ச்சல் கண்டுபிடிப்பு பணி.

Peravurani Town :

/ by IT TEAM



பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் தீவிர காய்ச்சல் கண்டுபிடிப்பு பணி நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன் முன்னிலை வகித்தார். இதைதொடர்ந்து பொன்காடு தேவதாஸ் ரோடு, மணிக்கட்டி ரோடு, ஆனந்தவள்ளி வாய்க்கால், மாவடுகுறிச்சி ஆகிய பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் பணிகள் நடந்தது. பின்னர் பொன்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar