Latest

latest

பேராவூரணி ஏ.டி.எம்.களில் டிசம்பர் 30 வரை பணம் எடுக்க சேவை கட்டணம் கிடையாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

Peravurani Town :

/ by IT TEAM

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டுகள் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரங்கள் இன்னும் மாற்றி அமைக்கப்படாததால் ஏ.டி.எம்.களில் தற்போது 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைக்கப்படுகின்றன.
எனவே அதில் உள்ள பணம் விரைவில் தீர்ந்து விடுகிறது. இதனால் பணம் எடுப்பதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.களை அடிக்கடி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.களை பயன்படுத்துவற்கான சேவை கட்டணம் வருகிற டிசம்பர் 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
அதாவது எந்த வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தினாலும் சேவை கட்டணம் கிடையாது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி இரவு அறிவிக்கப்பட்டது. அதற்கு மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு 10-ந்தேதி முதல் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த சேவை கட்டணம் ரத்து நடவடிக்கை கடந்த 10-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar