Latest

latest

வரலாற்றில் இன்று 02.01.2017

Peravurani Town :

/ by IT TEAM

இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர் சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் 1940ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.

இவருடைய கணக்கு ஆசிரியர் கணிதத்தை விளையாட்டுபோல கற்றுத்தந்தார். அதன் மூலம் இவர் கணக்கைப் பார்த்து பயந்து ஓட அவசியம் இல்லை என்பதை உணர்ந்தார். 

கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். கல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சிறந்த புள்ளியியலாளரான சி.ஆர்.ராவ் தலைமையில் ஆய்வு செய்து, 1963-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
இவர் கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவு, பெரிய விளக்கங்கள் கோட்பாடுகளை (வுhநழசல ழக டுயசபந னுநஎயைவழைளெ) உருவாக்கினார். வகையீட்டு சமன்பாடுகள் (னுகைகநசநவெயைட நஙரயவழைளெ) குறித்த கோட்பாடுகளை கண்டறிந்தார். இவரது 'ஸ்டொகாஸ்டிக் பிராஸசஸ்" என்ற நு}ல் கணித உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

நிகழ்தகவு கோட்பாட்டில் அடிப்படை பங்களிப்புகளுக்காக 'ஏபெல்" பரிசு (2007), பத்மபு ஷண் விருது (2008), அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், இன்ஃபோசிஸ் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள், பதக்கங்கள், கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

இவர் நண்பர்கள், சக பேராசிரியர்களால் எஸ்ஆர்எஸ் வரதன், ரகு என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர் என்று பாரட்டப்பட்ட இவர் தன்னுடைய 76வது வயதை இன்று நிறைவு செய்கிறார். 

அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடியான ஐசக் அசிமோவ் 1920ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.
இவர் தன்னுடைய 11 வயதில் கதை எழுத தொடங்கினார். பின்பு 1948-ல் உயிர் வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1950-ல் இவரது கதைத் தொகுப்பான ஐஇ சுழடிழவ வெளிவந்தது. அடுத்த ஆண்டே இவருடைய பவுண்டேஷன் நாவல் வெளிவந்தது. படைப்பாற்றல் மிக்க இவரது கதைகள் உலகம் முழுவதும் பிரபலமாயின.

இவர் வானவியல், உயிரியல், கணிதம், மதம், இலக்கியம் போன்ற துறைகளில், ஏறக்குறைய 500 புத்தகங்கள் படைத்துள்ளார். மேலும் 90 ஆயிரம் கடிதங்கள் எழுதியுள்ளார்.

அமெரிக்க மனிதநேய சங்கத்தின் கௌரவ முதல்வராகவும் பதவி வகித்தார். பல பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார். உலக அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட இவர் 72-வது வயதில் (1992) மறைந்தார்.
    முக்கிய நிகழ்வுகள்
      1954ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி பத்மஸ்ரீ, பத்மபு ஷண், பத்மவிபு ஷன் விருதுகள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டது.
        959ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதலாவது செயற்கைச் செய்மதி, லு}னா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
          2004ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.
            1876ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலமானார்.
              1960ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி தமிழக வரலாற்று அறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் காலமானார்.

              No comments

              Post a Comment

              Don't Miss

              News Ticker

              © all rights reserved
              Developed by Arun Kumar