திருச்சி பாரதிதாசன் பல்கலையில் மாணவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்.

No comments

Peravurani Town :




ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.

No comments

Peravurani Town :



தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி விட்டது. பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பல விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.

பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மார்ச் மாதத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் செய்தி கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மழை மார்ச் மாதத்தில் பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரவீன் தெரிவித்திருந்தார்.

பேராவூரணியில் மிதமான மழை பெய்து வருகிறது.

தஞ்சை பெரியகோவில் அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டிய போது மன்னர்கால நீரேற்று குழாய்கள் கண்டெடுப்பு.

No comments

தஞ்சை மாநகராட்சி பகுதியில் பழைய பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. தஞ்சை சிவாஜி நகர்- சேவப்பநாயக்கன்வாரி இடையேயும், பெரியகோவில் அருகே கல்லணைக்கால்வாய், கரந்தை பூக்கொல்லை, கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார்கோவில் அருகே, பெரியகோவில் அருகே உள்ள அகழி என 13 இடங்களில் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்காவில் இருந்து சீனிவாசபுரத்துக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பெரியகோவில் கோட்டைச்சுவர் அருகே இருந்த பழைய தரைப்பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பொக்லின் எந்திரம் மூலம் மண் தோண்டப்பட்டு வருகிறது.

3 இரும்பு குழாய்கள் கண்டெடுப்பு

நேற்று மாலை மண் தோண்டப்பட்ட போது பூமிக்கு அடியில் பெரிய இரும்புகுழாய் தென்பட்டது. உடனே அந்த குழாய் மேலே எடுக்கப்பட்டது. பின்னர் தோண்டிய போது அதில் மேலும் 2 இரும்பு குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த குழாய்கள் 10 அடி முதல் 12 அடி வரை நீளம் உடையது. இதில் ஒரு குழாயில் 2 புறமும் ஓட்டை உள்ளது. மற்றொரு குழாயில் ஒருபுறம் மட்டும் ஓட்டை உள்ளது. இன்னொரு பெரிய குழாயில் 2 புறமும் மூடப்பட்டு பக்கவாட்டின் ஒரு பகுதியில் 2 வால்வும், இன்னொரு புறத்தில் 3 வால்வுகளும் காணப்படுகின்றன.

இந்த 3 குழாய்களும் மண்ணுக்கு அடியில் இருந்ததால் அவை துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இந்த குழாய்கள் மன்னர்கள் காலத்தில் பீரங்கியில் பயன் படுத்தப்பட்ட குழாய்களாக இருக்கலாம் என கருதி ஏராளமானோர் வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து விசாரித்த போது அந்த குழாய்கள் மன்னர்கள் காலத்தில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக பூமிக்கு அடியில் பயன்படுத்தப்பட்ட குழாய்கள் என்பது தெரிய வந்தது.

மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டது

இது குறித்து தஞ்சை சரசுவதி மகால் நூலக பண்டிதர் மணிமாறன் கூறுகையில், “தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை பூங்கா குளம் மழைநீர் சேகரிப்பு குளம் ஆகும். மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த குளத்தில் மழை காலத்தில் பெரியகோவில் பகுதிகளில் உள்ள மழைநீர் அனைத்தும் சிவகங்கை பூங்கா குளத்தில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு குளங்களுக்கும், அரண்மனைகளில் உள்ள கிணற்றுக்கும் பூமிக்கு அடியில் தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதற்காக சுடுமண்குழாய்கள் பூமிக்கு அடியில் பதித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் தண்ணீரை பல பிரிவுகளாக அனுப்புவதற்காக இரும்பினால் ஆன நீரேற்று குழாய்களை பயன்படுத்தினர். அந்த குழாய்கள் தான் தற்போது பாலம் தோண்டிய போது கண்டெடுக்கப்பட்டுள்ளது”என்றார்.

பேராவூரணியில் நடைப்பெற்ற குதிரைவண்டி எல்கைப் பந்தயம் புகைப்படத் தொகுப்பு.

No comments

Peravurani Town :









பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு குதிரை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது

பேராவூரணியில் நடைப்பெற்ற மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் புகைப்படத் தொகுப்பு.

No comments











பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு பூஞ்சிட்டு மாடு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 11வது நாளாக போராட்டம்.

No comments






ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டம் 11வது நாளாக நீடித்துள்ளது. மாணவர்கள் மற்றும் திரையுலகினர் பங்கேற்பால் போராட்டக்களம் மேலும் வலுப்பெற்றுள்ளது. கடந்த 10 நாட்களாக வெவ்வேறு போராட்டங்களை முன்னெடுத்த நெடுவாசல் மக்கள், இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெடுவாசலுக்கு வந்துள்ள கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடிய தாங்கள் தற்போது விவசாயிகளின் நலன்களுக்காக ஒன்று திரண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்.

No comments

Peravurani Town :




பேராவூரணியில் பிள்ளையார் குரூப்ஸ் நடத்தும் 15 ஆம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பெரியமாடு, கரிச்சான்மாடு, நடுமாடு, கரிச்சான் குதிரை, நடு குதிரை, புது பூட்டு குதிரை உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி, குதிரை வண்டிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை சிங்கவனம் ஜமீன்தார் துவங்கி வைத்தார்.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar