Latest

latest

Peravurani

Peravurani

thanjavur

thanjavur

Pudukkottai

Pudukkottai

Other

Other

Agriculture

Agriculture

Pudukkottai

thanjavur

Photos

Photos

Namma Ooru Thiruvizha 2019

PVISNV2K19

Other

Agriculture

technology

உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27,28-05-2017.

No comments

பேராவூரணி அடுத்த உடையநாடு CRESCENT GUYS நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி 27.28-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டி இரவு 07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,000 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

பேராவூரணி ரெட்டவயல் சாலையை சரி செய்யகோரிக்கை.

No comments

பேராவூரணி – ரெட்டவயல் மெயின் சாலையின் குறுக்கே ரயில்வே சாலையில் செங்குத்தான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்து தருமாறு

பேராவூரணி மகாத்மா காந்திஜி இளைஞர் நற்பணி மன்ற தலைவர் வேத .குஞ்சருளன் மாவட்ட ஆட்சியருக்கு மனுஅனுப்பியுள்ளார்.

அவ் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பேராவூரணி காவல் நிலையம் அருகே ஆதனூர் வழியாக நெல்லடிக்காடு, ரெட்ட வயல் வழியாக ஆவுடையார் கோவில் செல்லும் மெயின் சாலையில் காவல் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ரயில்வே சாலை மெயின் சாலையின் குறுக்கே செல்கிறது. ரயில்வே துறையினர் அகல ரயில் பாதை அமைப்பதற்கான பணிகளை செய்து வரும்போது மெயின் சாலையை விட ரயில்வே சாலை சுமார் 10 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இதனால் ரயில்வே சாலையை கடக்கும் இடம் செங்குத்தான நிலையில் ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலையில்  25க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த வழியாக தான் பேராவூரணி நகருக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் . மேலும் ஒரு பக்கத்திலிருந்து வாகனம் ஏறும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இல்லை என்றால் பின்னால் வாகனத்தை எடுக்கும் போது பிரேக் பிடிக்க முடியாமல் பின்னால் செல்லும் வாகனங்களில் ஏறி சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 வாகனத்தில் செல்பவர்களாவது விழுந்து எழும் சூழ்நிலையில் உள்ளனர்.மேலும் விவசாயிகள் விவசாயம் செய்த காய்கறி, மற்றும் நவதானியங்களை விற்பனை செய்ய கொண்டு செல்லும்போது செங்குத்தான பாதையில் ஏறி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் விவசாயிகள் சைக்கிள் மூலம் விளைப்பொருட்களை கொண்டுச் செல்ல சம்பளத்திற்கு ஆள் கூட்டிச் செல்லும் சூழ்நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் எனவே தாங்கள் இந்த மனுவை ஏற்று சாலையை அகலப்படுத்தியும், எதிரே வரும் வாகனம் தெரியும் அளவிற்கு மெயின் சாலையை உயர்த்தியும் தந்து பொது மக்களின் கஷ்டம் போக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வரலாற்றில் இன்று மே 25.

No comments

மே 25  கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் “ஆட்சிக் காவலர் பெருமகன்” (Lord Protector) பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
1810 – ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1812 – இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
1837 – கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 – அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 – போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 – நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 – ஐக்கிய அமெரிக்காவில் கன்சாஸ் மாநிலத்தில் “உடால்” என்ற சிறு நகரை இரவு நேர சூறாவளி தாக்கியதில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
1961 – அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அதிபர் ஜோன் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1966 – எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் ட்சி-10 விமானம் ஒன்று சிக்காகோவில் விபத்துக்குள்லாகியதில் அதில் பயணித்த 271 பேரும் தரையில் இருவரும் கொல்லப்பட்டனர்.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2001 – அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1458 – மஹ்மூத் பேகடா, குஜராத் சுல்தான் (இ. 1511)
1865 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
1866 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1947)
1878 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
1918 – நா. முத்தையா, ஆத்மஜோதி இதழாசிரியர் (இ. 1995)
1933 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
1954 – முரளி, மலையாள நடிகர் (இ. 2009)

இறப்புகள்

  19?? – சி. வைத்திலிங்கம், ஈழத்து சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.
1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, ஜெர்மனிய இயற்பியலாளர் (பி. 1906)
2005 – சுனில் தத், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1929)
   2013 – டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)

சிறப்பு நாள்

சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்.
ஆர்ஜென்டீனா – மே புரட்சி நாள்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே – ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் – விடுதலை நாள் (2000)

பேராவூரணி அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.

No comments

பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் படப்பனார்வயல் கிராமத்தில் அரசு மதுக்கடை கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கடை அருகே பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடம், அம்மாவாரச்சந்தை, அரவைமில் மற்றும் கடைவீதி உள்ளது. இந்த மதுக்கடையில் மது அருந்துபவர்கள் பெண்களை கேலி செய்வது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நின்று தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை
நேற்று காலை மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த வேணிகலா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்ட கலால் அலுவலர் புண்ணியமூர்த்தி, திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த மதுக் கடையை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிகாரிகள் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற ஒரு மாதம் கால அவகாசம் தேவை என்றும், வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இது குறித்து பேசி தீர்வு காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தஞ்சை பெரியகோவில் பிரதோஷம் புகைப்படம்.

No comments


தஞ்சை பெரியகோவில் பிரதோஷம் புகைப்படம். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருமகளூரில் முறையீடு மனு அளித்தல் ஆர்ப்பாட்டம்.

No comments

சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெருமகளூர் பேரூராட்சி அலுவலம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முறையீடு, மனு அளித்தல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் வீரப்பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான பழனிவேலு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெருமகளூர் பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்திடவேண்டும் . 24 மணி நேரமும் மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பெருமகளூர்-ரெட்டவயல் சாலையை சீரமைத்து, கடைவீதியில் உள்ள மதுக்கடை, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்றி : தினகரன்

பேராவூரணி அடுத்த உடையநாடு நாளை சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி.

No comments

உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சுழற்கோப்பைகான கைப்பந்து போட்டி நாளை 25.26-05-2017 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டி இரவு07 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி
முதலிடம்பிடிக்கும் அணிக்கு ₹20,000 பரிசும்,
இரண்டாம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,000 பரிசும்,
மூன்றாம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,000 பரிசும்,
நான்காம்இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,000 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

மேலும்தொடர்புக்கு :

+91 8012999489,+91 7397196649,+91 9003707190


News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar