பேராவூரணியில் ஏப்ரல் 02 முதல் புதிய உதயம் அன்னைமடி மரசெக்கு.

No comments

Peravurani Town :



அன்னைமடி மரசெக்கு 02.04.2017  முதல் புதிய உதயம். பேராவூரணி ஸ்ரீ நீவி சில்க்ஸ் எதிரில், ஆவணம் ரோடு. 

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - பேராவூரணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரை.

No comments

தில்லியில் தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் பொதுச்செயலாளர் வி.சி.முருகையன் தலைமை வகித்தார். நிகழ்வில் கொள்கைபரப்புச் செயலாளர் ஆறு.நீலகண்டன், கே.வி.முனியன், வேம்பை சின்னத்துரை, பைங்கால் மதியழகன், ப.மூர்த்தி, வீரக்குடி ராசா, பொதுவுடைமைச் சிந்தனையாளர் அருள்மொழி, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், காவிரிப் படுகைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பழ.திருமுருகன், மெய்ச்சுடர் ஆசிரியர் நா.வெங்கடேசன், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒன்றிய அமைப்பாளர் தா.கலைச்செல்வன் ஆகியோர், விவசாயிகளின் வேளாண் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், வரட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழ் நாட்டு விவசாயிகளுக்கு வரட்சி கால இழப்பீடாக ஏக்கருக்கு ரூ,25000 வழங்க வேண்டும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு ரூ,10000 வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க வேண்டும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஏரி குளங்களை தூர்வாரி மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவுத்திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி முழக்கங்கள் செய்தனர். நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
நன்றி :  மெய்ச்சுடர்

இன்று உலக சிட்டுக்குருவி தினம்.

No comments

Peravurani Town :

மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகும்.

பேராவூரணி மிதமான மழை பெய்தது.

No comments

Peravurani Town :



பேராவூரணி சுற்றுவட்டார கிராமங்களில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேராவூரணியில் ஆகாஷ் நினைவு கிரிக்கெட் போட்டி.

No comments

பேராவூரணி நகரில் ஆகாஷ் நினைவாக சார்பாக நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் 18,19-03-2017 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
பேராவூரணி தாலுகா ஆபீஸ் மைதானத்தில், மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹8,001 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹6,001 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹4,001 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,001 பரிசும், ஜந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹2,001 பரிசும் வழங்கப்படவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹800 நுழைவுகட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 16 அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி குறித்தும், விதிமுறைகள் குறித்தும் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள +919659251371, +919842138089, +919788993995, +919942008554  என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.

பேராவூரணியில் காலை ‌சாரலுட‌ன் மழை.

No comments

Peravurani Town :




பேராவூரணியில் காலை ‌சாரலுட‌ன் மழை பெ‌ய்ததா‌ல் ம‌க்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் மாசி மாதத்தில் திருவிழா.

No comments





உடையநாட்டில் ராஜராஜன் நர்சரி பிரைமரி பள்ளி ஆண்டு விழா.

No comments






உடையநாட்டில் ராஜராஜன் நர்சரி & பிரைமரி பள்ளி 21 ஆம் ஆண்டு விழா.

மாசிமகத் திருவிழா முன்னிட்டு குதிரை சிலைக்கு மலை போல் குவிந்த மாலைகள்.

No comments

Peravurani Town :


குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் பெரிய குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கான காகிதப் பூ மாலைகள் குவிந்தது. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மாசிமகத் திருவிழா :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் முன்பு 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய குதிரை சிலை ஆசியாவில் பெரிய குதிரை சிலை என்று புகழ் பெற்றது. இந்த கோயிலின் மாசிமகத் திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. மாசிமகத் திருவிழா நேற்று தொடங்கியது.
குதிரை சிலைக்கு மாலைகள் குவிந்தது :
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி பெரிய குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பது தான். இந்த நிகழ்ச்சி மாசிமகத்தின் முதல் நாள் காலை முதலே தொடங்கிவிட்டது. தமிழகம் எங்கும் இருந்து நேர்த்திக் கடன் செய்து கொண்ட பக்தர்கள் காகிதப் பூ மாலைகளை லாரி, மினிலாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து நீண்ட வரிசையில் நின்ற அணிவித்தனர். காகிதப் பூ மாலை மட்டுமின்றி பழங்களால் கட்டப்பட்ட மாலையும்ரூபவ் பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. சில பக்தர்கள் நாட்டிய குதிரைகளின் நாட்டியத்துடன் வந்து மாலைகள் அணிவித்தனர்.
ஒரு சில பக்தர்கள் குதிரைக்கு அணிவிக்கும் மாலையை மங்கள வாத்தியங்களுடன் தலையில் சுமந்து வந்தனர்.
மாட்டு வண்டியில் வந்த பக்தர்கள் :
இந்த திருவிழாவிற்கு பல கிராமங்களில் இருந்து முன்பு கால் நடையாகவும் மாட்டு வண்டியிலும் வந்து தங்கி இருந்து தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். அந்த பழமை மாறக் கூடாது என்பதற்காக பலர் இந்த ஆண்டும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்து தங்கி இருந்தனர்.
சிறப்பு போக்குவரத்து :
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக கீரமங்கலம், அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், கொத்தமங்கலம், ஆலங்குடி மற்றும் பல ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீ அணைப்பு மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்காக சிறப்ப சிகிச்சைப் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த கூட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து பக்தர்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை தடுக்க கீரமங்கலம் போலிசார் தலைமையில் கூடுதல் போலிசாருடன் ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் சமூக விரோதிகளை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் :
திருவிழா காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரன்டிருந்தனர். கோயிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அன்னதான செய்தனர்.
நேற்று முன்தினத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. இன்று நடக்கும் தெப்ப திருவிழா வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அருகில் மங்களாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா.

No comments



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அருகில் மங்களாபுரம் கிராமத்தில் 11-03-2017 இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்த தத்ரூபமான காட்டிசிகள்.

குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் புகைப்படத் தொகுப்பு.

No comments









அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில்.

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மிதமான மழை பெய்தது.

No comments

Peravurani Town :


பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குளமங்கலம் மாசி மகத் திருவிழா நாளை முதல் ஆரம்பம்.

No comments

Peravurani Town :




குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோயில் மாசி மகத் திருவிழா 11.03.2017 முதல் 13.03.2017 வரைக்கும் திருவிழா நடைபெருகிறது.

தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

No comments

தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரம் கிலோ ரூ.20–க்கு விற்பனை

தஞ்சையில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிலோ ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோடைகாலம்
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை நாளுக்கு நாள், அதிகரித்த வண்ணம் உள்ளது.

மக்களும் வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இளநீர், மோர், குளிர்பானங்கள், தர்ப்பூசணி போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகிவருகிறார்கள். கோடை காலம் தொடங்கியதையொட்டி தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் தர்ப்பூசணி பழங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

தர்ப்பூசணி
தஞ்சை மருத்துவகல்லூரி சாலை, சீனிவாசபுரம் பகுதி, காந்தி மார்க்கெட், நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட தஞ்சை மாநகரின் பல்வேறு இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. தஞ்சைக்கு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு லாரிகளில் பழங்கள் கொண்டு வரப்படுகிறது.

தற்போது தஞ்சையில் 1 கிலோ தர்ப்பூசணி பழம் கிலோ ரூ.20–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் கோடை வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள அதிக அளவில் தர்ப்பூசணி பழங்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் தர்ப்பூசணி பழங்கள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

விளைச்சல் குறைவு
இது குறித்து தர்ப்பூசணி பழ வியாபாரி பூமிநாதன் கூறுகையில், ‘‘நாங்கள் தர்ப்பூசணி பழங்கள் விளையும் இடத்திற்கு சென்று கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை கொள்முதல் செய்கிறோம். அதனை லாரிக்கு எடுத்துச்செல்வதற்கான சுமைகூலி, லாரி வாடகை ஆகியவை சேர்த்து 1 கிலோ தர்ப்பூசணி பழங்கள் ரூ.20–க்கு விற்பனை செய்கிறோம். வறட்சி காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்தாலும் தற்போது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது’’என்றார்.

22 நாட்களாக நெடுவாசலில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

No comments

நெடுவாசலில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாடு கிராம மக்கள் இன்று தூக்கு போட்டு தற்கொலை போராட்டம்.

No comments

பேராவூரணி டவுன் உலக மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்.

No comments

Peravurani Town :


தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது.

No comments
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்.

பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடை பெறும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர். மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 39 ஆயிரத்து 741 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். மேலும் சிறைக் கைதிகள் 224 பேர் தேர்வெழுத உள்ளனர்.

எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் மட்டு மின்றி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினரின் பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதுவோரில் 6 லட்சத்து 19 ஆயி ரத்து 710 பேர் தமிழ்வழி மாணவ- மாணவிகள் என்பது குறிப்பிடத் தக்கது. சென்னை மாவட்டத்தில் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51 ஆயி ரத்து 658 மாணவ-மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுகிறார் கள். இதற்காக 209 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா தெரிவித்தார்.

பேராவூரணியில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மகளிர் தின பேரணி மற்றும் மகளிர் தின மாநாடு மார்ச் 08

No comments

Peravurani Town :


பேராவூரணியில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மகளிர் தின பேரணி மற்றும் மகளிர் தின மாநாடு. 

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

No comments

Peravurani Town :


பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றி  அமைத்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வாட் வரியை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும். 

இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுதது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹3.79 காசுகளும், டீசல் விலை ₹1.74 காசுகளும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

நெடுவாசலில் 18-வது நாளாக தொடரும் போராட்டம்.

No comments

Peravurani Town :



புதுக்கோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 18-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் அறவழிப் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. அளித்த விளக்கங்களை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

No comments





பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணி எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
நன்றி:தமிழ்செல்வன்.

ஜியோ பிரைம் திட்டம் பட்டியல்கள் வெளியீடு.

No comments

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும்.  மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் புதிய ப்ரைம் சந்தா வெளியிடப்பட்டது. அதாவது, ஆண்டுதோறும் ரூ.99/- என்ற ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் தவிர்த்து ரூ.303/- என்ற மாதக் கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் மூலம் வழக்கமான அதே சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

அதாவது ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவை பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பிரைம் இல்லா வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் சலுகைகள் வேறு வகைகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாள் திட்டமாக, பிரைம் சந்தாதாரர்கள் ரூ.19க்கு 200ஜிபி டேடாவை உபயோகிக்கலாம் என்றால், பிரைம் இல்லா சந்தாதாரர்கள் ரூ.19க்கு 100ஜிபி டேடாவை மட்டுமே உபயோகிக்க முடியும்.
வெளியான புதிய திட்டங்களின் கீழ், ரூ.149க்கு ப்ரைம் சந்தாதாரர்கள் ஒரு மாத காலம் எந்தவித தினசரி டேட்டா எல்லை பயன்பாடும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2ஜிபி அளவிலான 4ஜி தரவை பெற முடியும். மற்றொரு பேக் ஆன ரூ.499/-ன் கீழ் அதே வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் தினசரி 2ஜிபி என்ற டேட்டா பயன்பாடு எல்லை கொண்ட 60ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.303/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி டேடா வேலிடிட்டி உடன் 28ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.499/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேடா வேலிடிட்டி உடன் 56ஜிபி டேடாவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.999/- என்ற மாதாந்திர கட்டணத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு டேடா வரம்பு இல்லாமல் 60ஜிபி டேடாவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதைதவிற பிற சலுகைகளாக 90 நாட்களுக்கு 125ஜிபி வரம்பற்ற டேடா ரூ.1,999/-க்கும், 180 நாட்களுக்கு 350ஜிபி வரம்பற்ற டேடா ரூ.4,999/-க்கும், 360 நாட்களுக்கு 750ஜிபி வரம்பற்ற டேடா ரூ.9,999/-க்கும் வழங்கப்படுகிறது.

கொட்டும் மழையிலும் சுடச்சுட உணவு வழங்கும் நெடுவாசல் மக்கள்! மெய்சிலிர்க்க வைக்கும் உபசரிப்புகள்.

No comments

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல், நல்லாண்டர் கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட 5 இடங்களில், கடந்த 17 நாள்களாக போராட்டம் தொடர்கிறது. மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். போராடும் மக்களுக்கு ஆதரவாக நெடுவாசல் மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, ஏராளமான பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதால் போராட்டம் தொய்வில்லாமல் நடந்துவருகின்றது.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வருபவர்களை, தங்கள் சொந்த வீட்டு விசேஷத்துக்கு வரும், உறவுகளைப்போல, வரவேற்கும் நெடுவாசல் கிராமமக்கள், வெளியூர் நண்பர்களுக்கு, அங்கேயே சமைத்து “உணவு” பரிமாறுகிறார்கள். போராட்டக்களத்தில், குப்பைகளை சேகரிப்பது முதல் உணவு பரிமாறுவது வரை அனைத்தையும், அந்த கிராமத்து இளைஞர்கள், பெரியவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்கள்.

கடந்த 3-ம் தேதி விடாமல் கொட்டித் தீர்த்த மழையிலும் நனைந்துகொண்டே சமைத்து, சேறும் சகதியுமாக இருந்த நிலையிலும் மக்களுக்கு, வயிறார சோறு பரிமாறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த ஆறு நாள்களுக்கும் மேலாக இரவு பகலாக சமையல் பணியை மேற்கொண்டு வரும் பேராவூரணியைச் சேர்ந்த ஏ.எம்.சரவணனிடம் பேசினோம்.

”இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஏதாவது விசேஷம் என்றால் நாங்கள்தான் சமையல் செய்து கொடுப்போம். அந்தவகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கிய சில நாள்கள் கழித்து, இந்த ஊரில் முக்கியமானவர்கள் என்னை அழைத்து சமைத்துக்கொடுக்கச் சொன்னார்கள். இந்த ஊரும் மக்களும் நல்லா இருந்தால்தானே, நமக்கும் நல்லதுன்னு, சமைக்க ஒத்துக்கிட்டேன். ஒரு நாள் சமைக்க, 50 ஆயிரம் வரை ஆகும். ஆனால் நான் பணியாளர்களுக்குக் கூலி மட்டும் வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். அவங்களுக்கும் குடும்பம், பிள்ளைகள் இருக்கு இல்லையா சார். ராத்திரி பகலாக உழைத்தாலும், மன நிறைவாக இருக்கு. இந்தத் திட்டம் வந்தால், இந்தப் பகுதியே வீணாகப் போய்விடும்னு சொல்லுகிறார்கள். வருகிற எல்லோருக்கும் சோறு போடுவதைப் பெருமையா பேசுகிறார்கள். ஆனால் ஊருக்கே சோறுபோடும் விவசாயி மண்ணைக்காக்கப் போராடுகிறார்கள். மனசெல்லாம் கஷ்டமாக இருக்கு சார். இந்தப் போராட்டம் ஜெயிக்கணும். போராடும் மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்றார்.

சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணான பூமாலை, “இது நான் பிறந்த ஊர். நாங்கள் சின்ன வயசாக இருக்கும்போதே, எங்கம்மா இறந்துட்டாங்க. கஷ்டப்பட்டு வளர்ந்தோம். எங்க ஊரைப் பொறுத்தவரை, அப்பா, அம்மா இல்லன்னாகூட, குழந்தைகள், விவசாய வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளும். அப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். என்னை பேராவூரணியில் கல்யாணம் பண்ணிக்கொடுத்தாங்க. அங்க அவ்வளவா விவசாயம் இருக்காது. அதனால் எங்க அக்கா, ’மாதாமாதம் நெடுவாசலில் விளையும் காய்கறி, பயிர், நெல்’ என அனுப்பி வைப்பார்கள். அதைவைத்து, டவுனில் வாழ்ந்தாலும் சிரமம் இல்லாமல் வாழ்கிறோம். இப்போது, ‘அப்படி விளையும் நிலங்கள் எல்லாம் வீணாகப்போய்விடும்’னு சொல்கிறார்கள். இவ்வளவு பேர், வேலைவெட்டியை விட்டுட்டு வந்து போராடுகிறார்கள். சென்னை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து, யார் பெற்ற பிள்ளைகளோ, இங்க வந்து எங்க நிலத்தைக் காப்பாற்ற கஷ்டப்படுது. அதான் சரவணன் அண்ணன், சமைக்கக் கூப்பிட்டதில் இருந்து, ராத்திரி பகலா சமைச்சுக்கொடுக்கிறோம். இவ்வளவு பேர், மழை, வெயில் பார்க்காமல் போராடுறாங்க. இந்த அரசாங்கத்துக்கு இரக்கமே இல்லையா..? இந்தப் பாழாய்ப் போன திட்டத்தை ரத்து பண்ணினால் என்ன சார்” என ஆதங்கப்பட்டார்.

விவசாயி சந்திரபோஸ், ‘’எங்க ஊர் தம்பிகள், வெளிநாடுகளில் எண்ணெய்க் கிணறுகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள், இந்தத் திட்டம் பற்றி விளக்கிச் சொன்னபிறகுதான் முழுமையாகத் தெரிந்தது. தொடர்ந்து போராடும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வரும் மக்கள் பசியோடு போகக்கூடாதென்று முடிவுசெய்து, உள்ளூர் பொதுப்பணத்தில் சாப்பாடு சமைத்துப் போட ஆரம்பித்தோம். வெளிநாட்டில் உள்ள எங்கள் கிராமத்து தம்பிகள், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் உதவுகிறார்கள். எங்கள் மண்ணைக் காக்கும் போராட்டம். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்களின் பசியைப் போக்குகிறோம் அவ்வளவுதான்'' என்றார்.

இந்த மண்ணைக் காக்கும் போராட்டத்தில், மக்களின் பசியை உணர்ந்த இவர்களின் உபசரிப்பு பலரையும் மெய்சிலிக்க வைக்கிறது.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ், ம.அரவிந்த்
நன்றி: விகடன்

பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி.

No comments

Peravurani Town :


பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் நகர்புற பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர். 1985ம் ஆண்டு பேராவூரணியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை துவங்கப்பட்டது. துவங்கிய காலத்தில் 3 நகர்புற பேருந்துகளுடன் இயங்கிய பணிமனை, தற்போது 26 பேருந்துகளுடன் இயங்குகிறது. பேராவூரணி வட்டார தலை நகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளதால் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்திற்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே ஒரே வழி. சமீபகாலமாக பேராவூரணியிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட நகர்புற பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக பேராவூரணியிலிருந்து இரவு 9 மணிக்கு அறந்தாங்கி சென்று, அங்கிருந்து 10 மணிக்கு பேராவூரணி வரும் பேருந்தை திரும்ப வராமல் அறந்தாங்கியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் மதுரை, காரைக்குடி, குன்றக்குடி போன்ற ஊர்களுக்கு சென்றுவிட்டு அறந்தாங்கி வரும் பொதுமக்கள், பேராவூரணிக்கு செல்ல பேருந்து இல்லாமல் அறந்தாங்கியிலேயே இரவை கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்கள் காரைக்குடி கல்லூரி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். 

இதேபோல் பேராவூரணியிலிருந்து இரவு 8.30 மணிக்கு கொத்தமங்கலம் சென்று அங்கிருந்து பேராவூரணிக்கு வரும் பேருந்தை கொத்தமங்கலத்திலேயே நிறுத்திவிடுவதால் காய்கள் பயிரிடும் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் இரவில் நெடுவாசலிலிருந்து பேராவூரணிக்கு வரும் பேருந்தை நெடுவாசலிலிலேயே நிறுத்தி காலையில் வருவதால், பொதுமக்கள் ஆவணம் கைகாட்டியிலேயே இரவை கழிக்க வேண்டியுள்ளது. இதேபோல் எண். 96, 15, 6, உள்ளிட்ட பேருந்துகளையும் தங்களது இஷ்டத்திற்கு அதிகாரிகள் இயக்குகின்றனர். கடந்தசில வருடங்களாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளை நிறுத்திவிட்டு சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் என்ற பெயரில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளுக்கு பேராவூரணி பணிமனையிலிருந்து தினசரி இயக்கப்படவேண்டிய தூரம் கணக்கில் காட்டப்படுவதால் இதுகுறித்து யாரும் கண்டுகொள்வதில்லை. இதேநிலை நீடித்தால் பேராவூரணி பணிமனையை இழுத்து மூடிவிடுவார்களோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நன்றி : தினகரன்

ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 17வது நாளாக தொடரும் போராட்டம்.

No comments

நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக 17வது நாளாக தொடரும் போராட்டம்

பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது.

No comments



பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலை நேரத்தில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar