Latest

latest

பனைமரங்கள்.

Peravurani Town :

/ by IT TEAM



தற்பொழுது பனை விதைகள் விழும் காலம். அதைச் சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எறிந்து விட்டால் அது மழை பெய்யும் போது தானாகவே தழைக்கும். எந்தவிதப் பராமரிப்பும் தேவையில்லை. ஆடு,மாடுகள் கடித்தாலும் அதன்வளர்ச்சி பாதிக்காது.

இதன் வேர்கள் சுமார் 50 அடி ஆழம் வரை பூமிக்குள் செல்லும். இதனால் எவ்வளவு வறட்சியையும் தாங்கும். மழை காலங்களில் அதன் வேர்கள் மழைநீரை 50 அடி ஆழத்திற்கு பூமிக்குள் கொண்டு சேர்க்கும் குழாய்களாகச் செயல்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும்.

மண் அரிப்பை அறவே தடுக்கும். மலைப் பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் செல்பவர்கள் பைகளில் எடுத்துச் சென்று வீசி விட்டால் கூட அது தழைக்கும். இதை இறைவழிபாட்டின் ஒரு முறையாகக் கூட செய்யலாம். பனைமரங்களின் நன்மைகள் ஏராளம். ஓரிடத்தில் பனைமரங்கள் அழிக்கப் படுகின்றன என்றால் அந்த இடம் அழியத் தொடங்குகிறதென்று அர்த்தம் என்கிறார்கள் புவிசார் ஆய்வாளர்கள். நம் தமிழகத்தின் பாரம்பரிய பனைமரமே நம் நாட்டின்
*தேசியமரம் பனைமரம்*
என்பதை நினைவில் கொள்வோம்.

No comments

Post a Comment

Don't Miss

News Ticker

© all rights reserved
Developed by Arun Kumar